கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு!
Share
பு.கஜிந்தன்
க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலை சூழலை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்திய பின் தமது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர்.
இந்த செயற்பாடு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.




















