LOADING

Type to search

இலங்கை அரசியல்

குடும்ப சுமை காரணமாக பாஷையூருக்கு வேலைக்கு சென்ற விசுவமடுவைச் சேர்ந்த சிறுவன் மீது சுவர் விழுந்ததால் பலி!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் பாசையூரில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன்மீது சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் சென்று கடந்த 20ம் திகதி சனிக்கிழமை அன்று குருநகர் – பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்தார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடினார்.

இதன்போது மற்றைய சுவர் அவர்மீது விழுந்ததில் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.