LOADING

Type to search

இலங்கை அரசியல்

சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்தினை வழங்கிய எதிர்க்கட்சி தலைவர் சஜித்!

Share

பு.கஜிந்தன்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்.

அந்தவகையில் 12-06-2024 அன்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். இந்த பேருந்தானது சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களின் நலன் கருதி பேருந்து ஒன்றினை வழங்குமாறு பாடசாலை சமூகத்தினர் எதிர்க்கட்சித் தலைவரிடம் நேரடியாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர். அந்தவகையில் இன்றையதினம் இந்த பேருந்து வழங்கி வைக்கப்பட்டது.

வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பேருந்துக்கான பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன. அதன்பின்னர் மாணவர்களை ஏற்றி, எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலை வரை பேருந்தை செலுத்திச் சென்றார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐ.ம.ச வடக்கு மாகாண இணைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், கட்சியின் உறுப்பினர்கள், கல்லூரியின் அதிபர் திருமதி சுலபாமதி, பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.