LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதி விஜயம்: சட்டத்திற்கு உட்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைக்கு அனுமதி

Share

நடராசா லோகதயாளன்

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு  4ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள நிலையில், குறித்த விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்க கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு சட்டத்தை மீறாத வகையில், ஜனநாகய ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கு உரிமை உள்ளது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 7 ஆம் திகதி வரை யாழில் தாங்கியிருந்து பலவேறு சந்திப்புகளை நடத்தவுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கருதி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் உட்பட 8 பேருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய செய்வாய்க்கிழமை நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவிற்கு அமைய, வழக்கின் 8 ஆவது பிரதிநிதியான தவத்திரு வேலன் சுவாமிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி தமது நிலைப்பாட்டினை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.