LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் பேசும் முன்னாள் இராணுவ சிப்பாய் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Share

போதை பழக்கத்திற்கு ஆளான தமிழ்பேசும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து சில நாட்களுக்கு முன்னர் உயிர்மாய்த்துள்ளார்.புன்னாலைக் கட்டுவனின் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது

இவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், போதை பழக்கத்திற்கு ஆளாகி இருந்ததால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் சத்தியசீலன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.