LOADING

Type to search

இலங்கை அரசியல்

தாவடியில் தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

Share

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக 23ம் திகதி அன்றையதினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வியாழக்கிழமையன்றையதினம் மண்டைதீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கத்திக் குத்துக்கு இலக்காகி சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த நே.சர்வேந்திரன் வயது (45) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தாவடியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்மியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.