LOADING

Type to search

இலங்கை அரசியல்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் – ரஜீவன் தனது அரசியல் பயணத்தில் விரக்தியடைந்துள்ளாரா?

Share

எம்பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்?

பு.கஜிந்தன்

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நான் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என யாழ்ப்பாணமாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். என அறியப்பெறுகின்றது

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மேலும்,

பாராளுமன்ற உறுப்பினராக எனக்குள்ள உரிமைகளையும் கடமைகளையும் ப ◌பாவித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச் சொல்லி பல அரச அதிகாரிகளை கெஞ்சிக் கேட்டேன். பலர் உதவினார்கள். சிலர் உதவவே இல்லை. அதனை மன்னிக்க முடியாது.

அப்படியானவர்கள் தங்கள் பதவியை உறுதிப்படுத்த பாடுபட்டார்களே தவிர மக்களுக்கு உதவவில்லை. உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை வழங்குவேன்.

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நான் நிச்சயமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

எனக்கு உதவ ஆயிரம் வழிகள் உண்டு. அதே போன்று அதிகாரம் உள்ள யாரும் மக்களுக்கு நல்லது செய்ய பின் நிற்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.