LOADING

Type to search

இலங்கை அரசியல்

நெல்லியடி சந்திக்கு அருகாமையில் எம்.பி.சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு தின நினைவேந்தல்

Share

தமிழர் விடுதலை கூட்டணியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு நினைவுதின நினைவேந்தல் இன்று நெல்லியடி சந்திக்கு அருகாமையில் உள்ள சிவா சிலையடியில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக சென்னை உச்ச நீதிமன்ற சட்டத்தரணி கோபிநாத் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் கலந்துகொண்டு நினைவு தூவிக்கு மலர்மாலை அணிவித்துடன், மலர்களால் பூதூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலை கூட்டணியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ப. சிவசிதம்பரத்தினின் குடும்ப உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்