LOADING

Type to search

உலக அரசியல்

பொருளாதாரத்தில் 22 நோபல் பரிசு பெற்றவர்கள் கூட செய்யாத விசயங்களை செய்தேன் – டிரம்ப் பேச்சு

Share

அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, அமெரிக்காவை பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக மோசடி செய்து, கூடுதல் விலைக்கு பொருட்களை விற்று வந்த நாடுகளுக்கே, கூடுதல் வரி விதிக்கப்பட்டது. எனினும் அந்த நாடுகள் மகிழ்ச்சியாகவே இன்னும் உள்ளன. நாமும் இருக்கிறோம். அந்த ஒப்பந்தங்களை நாம் செய்தோம். இதனால் பணவீக்கமோ, மிக பெரிய வளர்ச்சியோ நமக்கு ஏற்படவில்லை. ஆனால், பொருளாதாரத்தில் 22 நோபல் பரிசு பெற்றவர்கள் கூட செய்யாத விசயங்களை டிரம்ப் எப்படி சரியாக செய்திருக்கிறார் என்பதே பெரிய விவாத பொருளாக உள்ளது. அவர்கள் அதனை தவறாக புரிந்து கொண்டனர். அதனால் 4 நாட்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றத்தில் இருந்து துரதிர்ஷ்டவச தீர்ப்பு வெளியானது. ஆனால் நல்ல செய்தி என்னவெனில், அனைத்து நாடுகளும், நிறுவனங்களும் அவர்கள் முன்பே ஒப்பு கொண்ட ஒப்பந்தங்களை செயல்படுத்தவே விரும்புகின்றனர் என்றார். பொருளாதார மற்றும் தேச பாதுகாப்பு அடிப்படையில், நான் இந்த வரி விதிப்புகளை கொண்டு நம்முடைய நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி அமெரிக்க டாலர்களை கொண்டு வந்தேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு வரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது என டிரம்ப் கூறினார்.