மதுரையில் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள், கொடிகம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
Share
அனுமதி பெறாமல் வைத்த சுவரொட்டிகள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தர மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் குறித்து மதுரையில் நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார், ஒத்துழைப்பு தருவதற்கு அரசு தரப்பு தயாரா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.




















