LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

Share

மன்னார் நிருபர்
(16-10-2025)

மன்னார் பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு 16ம் திகதி அன்று வியாழக்கிழமை (16) மாலை வங்கி கட்டிடத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக உதவி மாவட்ட முகாமையாளர் ,மன்னார் கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த வங்கியின் வாடிக்கையாளர்களின் பிள்ளைகள் குறித்த சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்விக்க பட்டதோடு குறித்த சிறுவர்களுக்கான புதிய வங்கி கணக்குகளும் திறந்து வைக்கப்பட்டது.