LOADING

Type to search

இலங்கை அரசியல்

மாதகலில் மிதிவெடி கண்டுபிடிப்பு!

Share

பு.கஜிந்தன்

இன்று (01.12.2023) இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் – உயரப்புலம் பகுதியில் உள்ள காணி ஒன்றில் மிதிவெடி அவதானிக்கப்பட்டது.

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது அந்த காணியில் வெடிகுண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த வெடிபொருளை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.