மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்
Share
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது. இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் “மை லார்ட்” திரைப்படம் நாளை (பிப். 13) வெளியாகிறது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மை லார்ட் வெளியீட்டை ஒட்டி நடிகர் சசிகுமார் அளித்த சமீபத்திய பேட்டியில் அடுத்து தாான் இயக்கப் போகும் படங்கள் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய சசிகுமார், “என்னிட்ம் மூன்று கதைகள் எழுதி முடிக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் படங்களில் மற்ற கதாநாயகன்கள் நடிப்பார்கள். இந்தப் படங்களில் நான் நடிக்க எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை. முதல் பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன, இதனால் தற்போது நான் வைத்திருக்கும் விருப்பப் பட்டியலில் கவனம் செலுத்த தயாராக இருக்கேன். இனி நான் படம் இயக்கவும் தயார். கவுதம் வாசுதேவ் மேனன் பலமுறை என்னிடம் கேட்டதால் தான் ஈஎன்பிடி திரைப்படத்தில் நடித்தேன். தலைவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் “பேட்ட” படத்தில் நடித்தேன். கிடாரி 2 படத்தின் ஐடியாவையும், அடிப்படை கதையையும் இயக்குநரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் ஒரு முழுமையான கதையுடன் வருவதற்காக காத்திருக்கிறேன்,” என்றார்.




















