LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் பொருளாதார ரீதியாக ரீதியாக நலிவுற்ற பொன்னாலைக் கிராமத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவன்!

Share

பு.கஜிந்தன்

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சைக்கீ தோற்றி மாணவன் ஒருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலை சமூகத்துக்கும், பெற்றோருக்கும், தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அரங்கநாதன் தத்வார்த்தன் என்ற மாணவனே இவ்வாறு 141 புள்ளிகளை பெற்றுள்ளார்.

குறித்த கிராமமானது பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களை கொண்ட கிராமமாக காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் சிறந்த பெறுபேற்றை அந்த கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் 5 வருடங்களின் பின்னர் குறித்த மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.