யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் இலங்கைக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்!
Share
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமாழ் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை (20.10.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக வளாகத்தின் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் காவல்த்துறையால் 2016ஆம் ஆண்டு ஓக்டோபர் 20ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டியில் இவ்விரு மாணவர்களும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















