LOADING

Type to search

சினிமா

வண்டலூர் பூங்கா யானையை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த ‛பராசக்தி’ படம் மக்கள் ஆதரவை பெற்று திரையரங்குகளில் வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது