விசேடகல்வி தேவை உடைய மாணவர்களுக்கான கட்டடம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் திறந்து வைப்பு
Share
விசேடகல்வி தேவை உடைய மாணவர்களுக்கான கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கு உட்பட்ட கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் இருக்கைகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்கிவிற்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஜெயராஜா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.




















