LOADING

Type to search

கனடா சமூகம்

கனடாவின் கிங்ஸ்டன் நகரில் றோயல் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயின்ற ‘கெடற்’ அதிகாரிகள் நால்வர் நள்ளிரவில் நீரில் மூழ்கி மரணம்

Share

கனடாவின் கிங்ஸ்டன் நகரில் றோயல் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயின்ற கெடற் அதிகாரிகள் நால்வர் நள்ளிரவில் நீரில் மூழ்கி மரணத்தை தழுவியுள்ள சம்பவம் கனடா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

, ஜாக் ஹோகார்த், ஆண்ட்ரே ஹோன்சியூ, ப்ரோடன் மர்பி மற்றும் ஆண்ட்ரேஸ் சலேக் (Jack Hogarth, Andrei Honciu, Broden Murphy Andrés Salek )அகிய நால்வருமே இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆவார்கள். நள்ளிரவு நேரத்தில் பயிற்சிக் கல்லூரியில் இருந்த இராணுவ வாகனமொன்றில் இந்த நால்வரும் ஏரிப் பக்கம் ஏன் சென்றார்கள்? எவ்வாறு இவர்கள் பயணித்த இராணுவ வாகனம் நீரில் மூழ்கியது என்பது குறித்து விசாணைகள் நடந்து வருவதாகவும் அறியப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பாக தங்கள் அதிர்ச்சியையும் அனுதாபவத்தையும் தெரிவிததுள்ள அரசியல் தலைவர்களில் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ. கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிற்றா ஆன்ந்த்( இவுர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கெர்ட ஒரு தமிழ்ப் பெண்மணி) மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
இந்த நீர் விபத்து ஒன்றாரியோ ஏரி மற்றும் சென் லோறன்ஸ் ஆறு ஆகிய இரண்டும் சந்திக்கும் புள்ளியில் இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மேற்படி விபத்தில் கொல்லப்பெற்ற இந்த நான்கு பயி;ற்சியில் இருந்த ‘கடற் அதிகாரிகளும் தங்கள் இறுதிக் கட்ட பயிற்சியில் இருந்தார்கள் என்றும் அவர்கள் இன்னும் – ஒரு சில வாரங்களில ராயல் மிலிட்டரி கல்லூரியில் பட்டம் பெற்றதைக் கொண்டாடியிருப்பார்கள், அடுத்த நாள், அதிகாரிகளாக நியமிக்கபு;ட்டிருப்பார்கள் என்றும் இறந்தவர்களோடு ஒன்றாக இராணுவ கற்கை நெறியில் ஈடுபட்டுள்ளள ஏனைய பயிற்சி நிலை கடற் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்று அறியப்பட்டுள்ளது
, தேசிய பாதுகாப்புத் துறையின் அறிக்கை ஒன்றின் படி 29ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட “மோசமான விபத்துச் சம்பவத்தில்” இறந்த நான்கு ஆண்டு அதிகாரி ‘;கெடற்’ அதிகாரிகளுக்காக அவர்களது குடும்பங்களும் அவர்களொடு நெருக்கமான இராணுவு பயிற்சிக் கல்லூரிச் சமூகமும் துக்கம் அனுசரிக்கின்றன.என்றும் அறியப்படுகின்றது
இராணுவு பயிற்சிக் கல்லூரிச் சமூகமும் இந்த துயரமான இழப்பால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது” என்று கல்லூரியின் பிரதான தளபதியான கொமடோர் ஜோசி குர்ட்ஸ் வெள்ளிக்கிழமை மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“பெற்றோர்களாக நாமே, அவர்களின் வலியை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும், மேலும் இனி வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் அவர்களுக்கு துன்பகரமான நாட்களாக இருந்தாலும் நாம் எமது கல்லூரியின் சார்பாகவும் படையினர் சார்பாகவும் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்டாரியோ ஏரி செயின்ட் லாரன்ஸ் நதியை சந்திக்கும் புள்ளி பிரடெரிக் தீபகற்பத்தில் உள்ள கிங்ஸ்டனில் உள்ள வளாகத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய சில விவரங்கள் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன, ஆனால் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்ததாக கனடாவின் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Frontenac Paramedics இன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விபத்தில் சிக்கிய நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பெற்றது, ஆனால் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.. நீரில் மூழ்கிய மோட்டார் வாகனம் குறித்த அழைப்புக்கு அவசர சேவைகள் பதிலளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எமக்குக் கிடைத்த தகவல்களின் படி சுமார் 1,200 மாணவர்களைக் கொண்ட இடைத்தர பயிற்சி வளாகத்தில் இடம்பெற்ற இந்தநான்கு பயிற்சி நிலை அதிகாரிகளின் இழப்பு ஆழமாக உணரப்படும் என்று குர்ட்ஸ் கூறினார்.

“நான் இங்கு வசிக்கின்றேன். அந்த இளைஞர்களை நான் தினமும் பார்க்கிறேன்,” என்று தெரிவித்த அவர் இந்த இழப்புக்கள் தொடர்பாக நினைப்பதும் மிகவும் . கடினம்.” என்றார்
இந்த கோடையில் ஹோகார்த், ஹொன்சியு மற்றும் சலேக் ஆகியோர் இராணுவத்திலும், ஹோகார்த் மற்றும் சலேக் கவச அதிகாரிகளாகவும், ஹோன்சியு ஒரு தளவாட அதிகாரியாகவும் தங்கள் பயிற்சியைத் தொடங்கியிருப்பார்கள். ராயல் கனடியன் விமானப்படையில் மர்பி ஒரு விண்வெளி சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டாளராக வந்திருப்பார்கள்

ஹோகார்த் மற்றும் சலேக் இருவரும் இராணுவ மற்றும் மூலோபாயப் படிப்புகளில் இளங்கலைப் படிப்பை முடித்தனர். ஹொன்சியுவும் மர்பியும் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நால்வரும் உயர் அதிகாரிகளாக வரவேண்டியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கனேடியப் படைகளின் தேசிய புலனாய்வு சேவைக்கு உதவ அதன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக கிங்ஸ்டன் பொலிசார் கூறியுள்ள நேரத்தில் விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.