Mississauga Trillium Hospital receives a largest donation of 100,000 dollars from Saravanaa Bavan Vegetarian Restaurants Group
Share
மிசிசாகாவில் மருத்துவச் சேவையாற்றும் Trillium Hospital – Trillium Health Foundation வைத்தியசாலைக்கு $100,000 நன்கொடை வழங்கிய சரவணபவான் சைவ உணவக நிறுவனம்

கனடா வாழ் தமிழ் பேசும் வர்த்தகப் பிரமுகரும் மக்களின் தேவைகளை அறிந்து பரோபகார உதவிகளை வழங்குபவருமான கணேசன் சுகுமார் அவர்களை தலைவராகக் கொண்டு இயங்கும் Sugshe Group of Companies குழுமத்தின் கீழ் இயங்கும் சரவணா பவன் சைவ உணவக நிறுவனமானது நமது சமூகத்திற்குள் சுகாதாரம் மருத்துவம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அதன் உன்னத நோக்கங்களுக்கு ஆதரவு வழங்கும் நீண்ட கால திட்டத்தின்படி மிசிசாகா நகரில் அமைந்துள்ள Mississauga Trillium Hospital Ontario Trillium FoundationTrillium Health வைத்தியசாலைக்கு $100,000 நன்கொடை அளித்துள்ளது என்ற செய்தியை இங்கு பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இந்த பங்களிப்பை மேற்படி வைத்தியசாலையின் சார்பாக மூத்த துணைத் தலைவர் திருமதி நிக்கோல் லாமண்ட் மற்றும் தொண்டு நிறுவனத்தின் மேம்பாட்டு அதிகாரி திருமதி டூபா நாசிர் ஆகியோர் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் திரு கணேசன் சுகுமார் அவர்களிடமிருந்து அண்மையில் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிதி அன்பளிப்பு தொடர்பாக திரு கணேசன் சுகுமார் அவர்கள் நண்பர்களிடம் உரையாடுகையில் “இந்த முயற்சி எனது பயணம் முழுவதும் என்னை ஊக்கப்படுத்தியும் ஆதரித்தும் வரும் சமூகத்திற்குத் திருப்பித் கொடுப்பதற்கான எனது வாழ்நாள் உறுதிப்பாட்டின் மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த நிதி அன்பளிப்புக்களை வைத்தியசாலைகளுக்கு வழங்கும் வரிசையில், ஸ்கார்பரோ கிறேஸ் வைத்தியசாலை மற்றும் பொது வைத்தியசாலைகளுக்கு $500,000 நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து, கனடா முழுவதும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துதல் என்ற எனது தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

எமது Sugshe Group of Companies குழுமத்தில் பணியாற்றும் நாங்கள் அனைவரும் ஆழமான நம்பிக்கையைக் கொண்டுள்ளோம் – உண்மையான வெற்றி என்பது நாம் நமக்காக என்ன சாதிக்கிறோம் என்பதன் மூலம் அல்ல, மாறாக மற்றவர்களுக்கு நாம் என்ன பங்களிக்கிறோம் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், , தரமான பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்துவதிலும், அனைவருக்கும் ஆரோக்கியமானதும் , இரக்கமுள்ளதுமான உலகத்தை உருவாக்குவதிலும் ஒரு சிறிய பங்கை வகிக்கின்;றோம் என நாம் நம்புகின்றோம்.” என்று திரு கணேசன் சுகுமார் தெரிவித்தார்.




















