மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பத்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் இம்மாதம் 3,4,5ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன. மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரின் கோரிக்கைக்கமைவாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பும்(International Medical Health Organisation-USA) இரட்ணம் பவுண்டேசன் அமைப்பும்(Ratnam Foundation-UK) இணைந்து பன்னிரண்டு பாடசாலைகளுக்கு திறன் பலகைகளை வழங்கியது ...
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் ...
(மன்னார் நிருபர்) (14-04-2023) யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(13) இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றது. இதன் போது நவாலி மானிப்பாயை ...