’இருமுடி கட்டு’ படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது
Share
ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி கட்டு’ படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவான இருமுடி கட்டு படம் கடந்த 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியீடு ஆனது. சிவ நிர்வாணா இயக்கத்தில் வெளியீடான இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 21ம் தேதி வெளியீடு ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இருமுடி கட்டு திரைப்படம் முதல் 12 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.















