LOADING

Type to search

உலக அரசியல்

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது

Share

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது. 

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும்.  

இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,021 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது. காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது.