கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது
Share
பு.கஜிந்தன்
கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வானது நேற்றையதினம் காலை 8 மணிக்கு கல்லூரி முதல்வரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான அருட் சகோதரி மரிய வசந்தி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி தெற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான உதவிக்கல்வி பணிப்பாளர் து. ஜீவானந்தனும், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி தெற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் ஜெயரத்தினம் நிசாகரும், கௌரவ விருந்தினராக பழைய மாணவி சதீசன் பியந்தினியும் கலந்து சிறப்பித்தனர்.
பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகராக செல்வி ஜோ சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். பிரதமராக செல்வி ச.புகழ்செல்வியும் குழுக்களின், தலைவராக சு.சுவாதியும் தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து அமைச்சர்களால் பாடசாலையினதும் மாணவர்களும் முன்னேற்றத்திற்கான பல்வேறு பிரேரனைகள் முன்வைக்கப்பட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்ற நடவடிக்கைக்காக 26.10.2026 அன்று வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டது.
















