LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

Share

(சுருவில் யாழ்ப்பாணம்)

ஆறு வருடங்கள் ஆண்டவன் அளித்த வரம் என்றே எண்ணி நின்றோம்.
மனதில் ஏக்கத்தைச் சுமந்து எம் பாமாவைத் தாங்கிநின்றோம்.
அவர் அருகிருந்து ‘அம்மாவை’ வணங்கி வேண்டுதல் செய்தோம்.
பெரும் பாரத்தைச் சுமந்தவராய் எம் பாமா காலத்தை வென்று வாழ்ந்தார்.
கனிவோடு பாசத்தை பகிர்ந்தார். குழந்தைகள் விரும்பும் தாயாகத் திகழ்ந்தார்.
குடும்பத் துணைவருக்கு தோளாயும். பெற்ற இருவரை போற்றியும் வாழ்ந்தார்
‘அழைப்பு’ வந்ததும் அமைதியாய்ப் பிரிந்தார் அன்னையின் அடியை நாடி!

யாழ்ப்பாணம் சுருவில், ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்துவந்தவருமான திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன் அவர்கள் 01-05-2026 அன்று அன்னையின் திருவடியைச் சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி தம்பதியின் கனிஸ்டபுத்திரியும். மகேஸ்வரி நாகலிங்கம் அவர்களின் செல்லப் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா-சந்தானலட்சமி தம்பதியின் அன்பு மருமகளும், கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், பவித்திரன், வாசுகியின் ஆகியோரின் அன்புத் தாயாரும், நிலாஷா, ஜெனிசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், பத்மலோசனி,சத்தியலோசனி, சத்தியவேணி காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, சத்தியகுமார். சத்தியபவான் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற உமாதேவியின் மைத்துனியும், நவதாஸ் அவர்களின் சகலியும், லோகேந்திரலிங்கம், சுதந்திரகரன், காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம், மற்றும் சாந்தினி,சுகிர்தா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் செவ்வாய்கிழமை 05-05-2026 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணிவரையும்,

மறுநாள் புதன்கிழமை காலை 9:30 தொடக்கம் 11:00 வரையும் 8911 Woodbine Ave, Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home 60

பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:

கதிர்காமநாதன் (நாதனி் – கணவன்) 416-724-5044
பவித்திரன் (மகன்) 647-980-5044