சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு
Share
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரின் யான்பெங் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை சுமார் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















