மட்டக்களப்பில் மாவட்டத்தில் யூட்நிமால் அனுஸ்ராம் விஞ்ஞானப்பிரிவில் 3 ஏ பெற்று மாவட்டத்தில் முதலிடம்.
Share
(கனகராசா சரவணன்)
அண்மையில் வெளிவந்த இலங்கை க.பொ.த உயர்தரப் பிரிவில் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் யூட்நிமால் அனுஸ்ராம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த நாவற்குடா கணக்குப்பிள்ளை வீதியைச் சோந்த யூட்நிமால் தம்பதிகளின் புதல்வாரன அனுஸ்ராம் பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்று விஞ்ஞான பாடத்தில் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு இலங்கையிலிருந்து மாத்திரமல்ல உலகின் பல பாகத்திலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.















