மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்தில் அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர் உயிரிழந்தனர்
Share
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் இருந்து வந்த அமேசான் சரக்கு விமானம், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகியது. அப்போது விமானம் அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.















