LOADING

Type to search

இலங்கை அரசியல்

களுவாஞ்சிக்குடியில் தனியர் பஸ்வண்டியில் நடத்துனர் ஒருவர் திருடியதாக பொய் கூறி தாக்கிய இருவருக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்

Share

(கனகராசா சரவணன்)

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி நடத்துனர் தொலைந்துபோன் னையடக்க தொலைபேசியை பஸ்வண்டியில் தேடி போன நிலையில் அவரை பணம் திருடியதாக பொய் தெரிவித்து தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ்வண்டி உரிமையாளர், சாரதி ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (8) உத்தரவிட்டார்.

அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நடத்துனரான இளைஞன் கல்முனையைச் சோந்த தனியார் பஸ்வண்டி உரிமையாளர் ஒருவரின் கல்முனை கதுருவெல பிரதேசத்துக்கான பிராணிகள் சேவை பஸ்வண்டியில் நடத்துனராக கடமையாற்றி வந்துள்ளார்.

இதன்போது களுவாஞ்சிக்குடி மகிளுரைச் சேர்ந்த பஸ்வண்டி உரிமையாளரது பஸ்வண்டி கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில் இரு பஸ்வண்டிகளின் நேர அட்டவணையில் நிமிட கணக்கான வித்தியாசத்தினால் பிரயாணிகளை ஏற்றுவதில் அடிக்கடி முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது

இந்த நிலையில் 5ம் திகதி சனிக்கிழமை கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ்வண்டி நடத்துனர் சாரதியுடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் பஸவண்டியில் ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திய நிலையில் அவருக்கு மதுபோதை அதிகரித்த நிலையில் அவரது கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது அதனை தேடியபோது அது கிடைக்காத நிலையில் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.

இதனையடுத்து 6ம் திகதி காலையில் காணாமல் போன கையடக்க தொலைபேசி தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ள அவர் சம்பவதினமான 7ம் திகதி காணாமல்போன கையடக்க தொலைபேசியைத் தேடி மீண்டும் களுவாஞ்சிக்குடிக்கு சென்று குறித்த பஸ்வண்டியில் தேடிய நிலையில் அவரை பஸ்வண்டி உரிமையாளர் சாரதி நடத்துனர் பிடித்து கையைகட்டி பஸ்வண்டியில் திருடியதாக பொய்யாக தெரிவித்து பாழடைந்த காணிக்குள் இழுத்துச் சென்று தென்னைமரத்தில் கட்டிவைத்து தாக்கி சித்திரவரை செய்தனர்

இதனை பொதுமக்கள் கண்டதையடுத்து கட்டிவைத்த நடத்துனரிடம் நீ பொலிசில் தெரிவித்தால் உன்னை கைது செய்து 14 நாட்டகள் களிதின்பதற்கு சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தி அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றி ஏற்றிக் கொண்டு கல்லாறு பாலத்திற்கு அருகில் இறக்கிவிட்டதையடுத்து குறித்த நடத்தினர் கல்முனை அஸ்ரப் நாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடத்துனர் தொடர்பான எந்த விதமான தகவலும் தெரியாத நிலையில் வீடியோ காட்சி வெளிவந்த நிலையைக் கொண்டு கட்டிவைத்து தாக்குதல் மேற்கொண்ட தனியர் பஸ்வண்டி உரிமையாளர் மற்றும் சாரதி கைது செய்யப்பட்ட பின்னர் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து உண்மைக்கு புறம்பாக திருட்டில் ஈடுபட்டதால் பிடித்து தாக்கியதாக சோடித்தமை பொலிசாரின் விசாரணையில் தெரியந்துள்ளது.

அதேவேளை பாதிக்கப்படவரின் உறவினர்கள் மனித உரிமை ஆணையகத்தில் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் நடந்த உண்மையை விளங்கி கொண்டு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்திய போது இருவரையும் 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.