LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு- 3 காவல்துறை அதிகாரிகள் மரணம்

Share

அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரை காவல்துறை கைது செய்ய சென்றனர். அப்போது காவல்துறை மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 காவல்துறை அதிகாரிகள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.