LOADING

Type to search

இலங்கை அரசியல்

மூளாய் காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் ஊடக வலுப்படுத்தல் பயிற்சி

Share

யாழ்ப்பாணம் – மூளாய் காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் கிராமமட்ட சங்கங்களுக்கான ஊடக வலுப்படுத்தல் செயற்றிட்டமானது 8ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் மூளாயில் உள்ள காவேரி கலா மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பயமில்லாத உரையாடல், நேர்த்தியான உரையாடல் போன்றவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் சமூக மட்ட அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் கலந்துகொண்டனர்.