LOADING

Type to search

உலக அரசியல்

காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டிய தந்தை

Share

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிலையில், காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார். போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.