LOADING

Type to search

இந்திய அரசியல்

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற ராகுல் காந்திக்கு ஆர்வம் இல்லை – கிரண் ரிஜிஜூ

Share

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த 28-ந்தேதி அதிபர் உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது. மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியைத் தொடங்கிய எதிா்க்கட்சிகள், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தன. கடந்த 3-ந்தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடை நீக்கம் செய்யப்பட்டனா். சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமா்வு மாா்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில் நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தை நடத்துவதில் ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை. பிரச்சினைகளை உருவாக்குவதில் அவர் விருப்பம் காட்டுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நாட்கள் வரும் என்று ராகுல் காந்திக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன. அதனால் தான் அவர் அவையை முடக்கி வருகிறார். நாடாளுமன்றத்தில் நிலவும் சூழ்நிலையை தணிக்க மத்திய அரசு காங்கிரசை சமாதானப்படுத்த கூடுதலாக எதுவும் செய்யப் போவதில்லை. பல முயற்சிகள் வீணாகிவிட்டன. தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் காங்கிரஸ் கட்சி விரக்தி அடைந்து உள்ளது. நிலைமையை மாற்ற அவர்கள் தீவிரமாக உள்ளனர். ஆனால் காங்கிரசுக்கான நாட்கள் வராது. அடுத்த தேர்தல்களிலும் அவர்களது எண்ணிக்கை (மக்களவை) மேலும் குறையும். அனைத்து எதிர்க்கட்சி களும் காங்கிரசுடன் இல்லை. சிறிய கட்சிகள் அந்தந்த கட்சி நேரத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் ராகுல்காந்தி மீது சிறிய கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. அவையை முடக்க வேண்டாம் என்று காங்கிரஸ் மீது அழுத்தம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளில் சிலர் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை. அவை செயல்பட வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.