பிரதமர் மோடி – பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் சந்திப்பு
Share
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்ற பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். டில்லி பாலம் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த பின்லாந்து அதிபரை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றார். இந்நிலையில், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதுவது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.




















