LOADING

Type to search

சினிமா

பின்னணி பாடகி தீ பாடிய இசைத் தொகுப்பு

Share

தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட தீ, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ளது. ‘என்ஜாய் என்ஜாமி’ என்ற பண்பாட்டு கீதத்தின் மூலம் தீ அபாரமான புகழைப் பெற்றார். உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்ததுடன், வேர்கள் மற்றும் அடையாளத்தை கொண்டாடும் அதன் உணர்வால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்தப் பாடல் இந்திய சுயாதீன இசையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றதோடு, தீயை உலக இசை வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது. அவரது கலைத்திறன் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க கௌரவங்களை பெற்றுள்ள அவர், சமகால இசை உலகில் முன்னோடி கலைஞராக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார். இந்தப் பாடல்கள் உணர்வு, அடையாளம் மற்றும் பரிசோதனையான இசை வடிவங்களை ஒருங்கிணைக்கும் அவரது தனித்துவமான திறனை வெளிப்படுத்துகின்றன. இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படுவதுடன், உலகளாவிய ரசிகர்களாலும் அதிக அளவில் கொண்டாடப்படும் தீ, எல்லைகளையும் இசை வகைகளையும் கடந்து நிற்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் பிரதிநிதியாக திகழ்கிறார். தற்போது, தனது சமீபத்திய சுயாதீன பாடலான ‘வரி வரி’ வெளியீட்டிற்காக அவர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் தேதியன்று கொழும்புவில் இந்த இசை ஆல்ப வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த வெளியீடு அவரது தொடர்ந்து வளர்ந்து வரும் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைகிறது. மேலும், அவரது கதை தொடங்கிய இலங்கை மண்ணுடன் மீண்டும் இணையும் ஒரு சிறப்பு தருணமாகவும் இது விளங்குகிறது.