முப்படை, கடற்படை புதிய தலைமை தளபதிகள் பொறுப்பேற்று கொண்டார்
Share
முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன் அந்த பதவியை வகித்த அனில் சவுகான் தன்னுடைய பதவி காலம் நிறைவடைந்ததும், நேற்று ஓய்வு பெற்றார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்த ராஜா சுப்பிரமணி, கடந்த ஆண்டு ஜூலை 31-ந்தேதி துணை தலைமை தளபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இதனை முன்னிட்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பிறகு, போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோன்று, கடற்படையின் புதிய தலைமை தளபதியாக கிருஷ்ண சுவாமிநாதன் பொறுப்பேற்று கொண்டார். அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவர் இந்த பதவியை ஏற்று கொண்டார்.
















