LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்

Share

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,593வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ரஷிய அதிபர் புதினிடம் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 46 பேர் படுகாயமடைந்தனர்.