LOADING

Type to search

உலக அரசியல்

தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர்

Share

தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 27 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் பப் ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தீ மளமளவென பரவியதுடன் கரும்புகை சூழ்ந்து கொண்டது. இதனால், பப்பில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே தப்பி செல்ல முடியவில்லை. இந்த சம்பவத்தில் சிக்கி, 27 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அலட்சியப்போக்கால் விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது. இதுபற்றி காவல்துறை விசாரித்து வருகின்றனர்.