நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்
Share
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. கடுமையான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.















