LOADING

Type to search

உலக அரசியல்

காசாவில் ஹமாஸ் மூத்த தலைவரை கைது செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்

Share

காசாவில் நடைபெற்ற தரைவழி நடவடிக்கையின்போது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரை இஸ்ரேலிய படைகள் கைது செய்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கையில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தனர். காசாவில் உள்ள ஹமாஸின் உள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரே இலக்கு என்று பிரதமர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார், ஆனால் அவர் மேலதிக விவரங்களை அளிக்கவில்லை. இஸ்ரேலிய ஊடகங்கள் அவரை முயின் அல்-அராபித் என அடையாளம் காட்டின. ராணுவமும் ஷின் பெட் உள்நாட்டுப் பாதுகாப்பு சேவையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இலக்கு வைக்கப்பட்ட அமைப்பு “சமீபத்தில் வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கவும் செயல்பட்டது” என்று தெரிவித்துள்ளன. மேலதிக விசாரணைக்காக அவர் இஸ்ரேலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தரைவழி நடவடிக்கையுடன் இணைந்து, தனது படைகளுக்கு இருந்த அச்சுறுத்தல்களை அகற்றும் நோக்கில் அப்பகுதியில் உள்ள பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.