மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளராக ஜெ.சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Share
இதுவரை நாளும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளராக பணியாற்றியபோது இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெ.சுதாகரன் நீண்ட காலம் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம்கொண்டவர்.
இதேநேரம் தற்போதைய மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.















