LOADING

Type to search

பொது

கள்ளகாதலுக்கு இடைஞ்சல்., 4 வயது குழந்தையை கொன்று விட்டு தாய் நாடகமாடியது அம்பலம்

Share

4 வயது குழந்தை யை கொன்ற தாய் மற்றும் கள்ளகாதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், மேலவாஞ்சூா் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் அரவிந்த்.

இவருக்கு திருமணமாகி அபா்ணா என்ற மனைவியும் கவித்திரன்(4) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில், அபர்ணாவிற்கு சுரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளைடைவில் இந்த பழக்கம் கள்ளகாதலாக மாறவே இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜீலை 28 தேதி கவித்திரன் இறந்து கிடந்துள்ளான். இதற்கிடையில், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கார்த்திக் அரவிந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அபர்ணாவும் சுரேஷும் தனிமையில் இருந்த போது குழந்தை கவித்திரன் தொந்தரவு செய்ததாகவும் இதனால் கோபமடைந்த அபர்ணா குழந்தையை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் தெரியவந்தது.