LOADING

Type to search

அரசியல்

கல்யாணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

Share

கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜாபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (27) அதே பகுதியை சேர்ந்தவர் தானிஸ்வரி (23) இருவரும் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. பொறியியல் படிப்பு முடித்த பின்னர் சிவகுமார் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அங்கு தனியாக அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதேபோல தானிஸ்வரி படிப்பு முடிந்து மேல்படிப்புக்காக பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு வந்து தனியாக அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததால் தொடர்ந்து இவரது காதல் இடைவிடாமல் நடந்து வந்துள்ளது. இருவரும் வார இறுதி நாட்களில் சந்திப்பதும் பேசிக்கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது.

மேலும் செல்போனிலும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே தானிஸ்வரிக்கு அவரது தந்தை அசோக் சர்மா திருமணம் செய்ய முடிவெடுத்து மாப்பிள்ளை பார்த்து உள்ளார். மாப்பிள்ளையை நேரில் பார்ப்பதற்காக தானிஸ்வரிக்கு அவர் அழைப்பு விடுத்து ஊருக்கு வர சொல்லியுள்ளார்.

தானிஸ்வரி தனது ஊருக்குச் சென்று தந்தையிடம் தான் சிவகுமார் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தானிஸ்வரியின் தந்தை அசோக் சர்மா சிவகுமாரை நேரில் அழைத்து வந்து தன்னிடம் சம்மதம் வாங்கிய பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து தானிஸ்வரி, சிவகுமாரை தனது தந்தையிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சிவகுமார், தான் வேறு ஜாதி என்றும்.

தானிஈஸ்வரி வேறு சாதி என்றும் இருவரது திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள், அவர்கள் இறந்து விடுவார்கள் எனவே திருமணம் செய்ய தனக்கு சம்மதம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் தானிஸ்வரியும் அவரது பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து தானிஸ்வரி தனது தந்தையிடம் தனது காதலர் சிவகுமாரிடம் பேசி சம்மதம் வாங்கி வருகிறேன் என கூறி மீண்டும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டிக்கு வந்துள்ளார். கடந்த 16ஆம் தேதி சிவகுமார் வேலை பார்க்கும் தனியார் கம்பெனிக்கு சென்று அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் சிவக்குமாரோ அதற்கு மறுப்பு தெரிவித்து விடாப்பிடியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிவகுமார் தானிஸ்வரியை தனியாக அழைத்துச் சென்று அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளதாக கூறப்படுகிறது. உடலில் 80 சதவீத தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த தானிஸ்வரி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தானிஸ்வரியின் பெற்றோர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு வந்து சம்பவம் குறித்து எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் காதலன் சிவகுமாரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவானார் அதனைத்தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.