LOADING

Type to search

அரசியல்

மார்க்கிசம் சார்ந்து மனித நேயம் கொண்டவராக இருக்க வேண்டிய புட்டின் மனநோயாளியாக மாறியதே இந்த போர் உருவாகக் காரணமா?

Share

ரஸ்ய அதிபர் புட்டின் என்னும் மார்க்சிய வாதியை மாற்றியது அவரது நோய்கள்தான் என கண்டறியப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மனநோயே, அவர் உக்ரைன் மீது போர் தொடுக்க காரணமாக இருக்கலாம் என தான் கருதுவதாக தெரிவிக்கும் அலன் என்னும் அவரைத் தெரிந்த ஒருவர். இதற்கு முன், 2014ஆம் ஆண்டு, தான் புட்னை குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது பார்த்ததாகவும், அப்போது அவர், 1991இல் தான் பார்த்த புடினைப்போலவே இருந்ததாகவும், ஆனால் இப்போதோ, அவர் மாறிவிட்டதாகவும், அவரது முகம் கூட வீங்கியிருப்பதுபோல அசிங்கமாகத் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில். மார்க்கிசம் சார்ந்து மனித நேயம் கொண்டவராக இருக்க வேண்டிய புட்டின் மனநோயாளியாக மாறியதே இந்த போர் உருவாகக் காரணமாக இருக்கலாம் என்ற விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன என அறியப்படுகின்றது

புட்டின் உலகை அழிக்கத் துடிப்பதற்கு அவருக்கு உருவாகியுள்ள நோய் காரணமாக இருக்கலாம் என உலகப் புகழ் பெற்ற உடல் மொழி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘Mr Body Language’ என்று அழைக்கப்படும் Allan Pease, தனக்கு புடினை 30 ஆண்டுகளாக தெரியும் என்றும், புட்டின் திடீரென எடை அதிகரித்துள்ளது தனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாகவும், அதற்குக் காரணம் அவரது உடல் நலப் பிரச்சினைகள்தான் என்றும் கூறியுள்ளார்.

உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புட்டின், இப்போதைக்கு உடற்பயிற்சி செய்வது போல் தெரியவில்லை என்று கூறும் அல்ன, புட்டினுக்கு புற்றுநோய் அல்லது பார்க்கின்சன் நோய் உருவாகியிருக்கலாம் என ரஷ்யாவில் வதந்திகள் உலாவருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்பு எதையும் பொறுப்பேற்று உறுதியாக முன்னின்று நடத்தும் புட்டின், தற்போது தன்னை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்வதாக தெரிவிக்கும் அலன் சமீபத்தில் ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில், புட்டின் ஒரு நீண்ட மேஜையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.

எதிர்காலத்தில் தன்னை யாரேனும் தாக்கலாம் என புட்டின் கருதுவதாக n தெரிவித்தள்ள அலன்
அவரது உடல் எடை கணிசமாக அதிகரித்துள்ளது, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார், யார் தன்னை சந்திக்க வந்தாலும், தனக்கு எதிராக தூரத்தில் அவர்களை அமரவைக்கிறார். என்றும்

ஆக, அவர் மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. யாருடனும் இருக்க அவர் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.