LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா எழுத்தாளர் அகணி சுரேஸின் மூன்று நால்களின் வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது

Share

கனடா வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவருமாகிய அகணி சுரேஸ் எழுதிய மூன்று நால்களின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகர சபை சபா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மண்டபம் நிறைந்த விழாவாக இடம்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் கலந்து சிறப்பிக்க அழைக்கப்பெற்றிருந்தார்.

கவிதை கட்டுரை விமர்சனம் பாடல்கள் எழுதுதல் கற்பித்தல் மற்றும் இசை போன்ற பல துறைகளில் தனது பங்களிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கி வரும் எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களின் இந்த விழாவில் அனைத்துப் பிரிவுகள் சார்ந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தன.

சிறுவர் சிறுமியர் மாணவ மாணவிகள் பெரியோர்கள் கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் நிகழ்சசிகளில் பங்கு பற்ற வாய்ப்புக்கள் வழங்கப்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டுரைச் சாரல் கதைச் சாரல் மற்றும் ஆங்கில நூல் ஒன்று என அன்று வெளியிடப்பெற்ற மூன்று நூல்களின் பிரதிகளை பலரும் பணம் கொடுத்துப் பெற்றுச் சென்றார்கள். அங்கு வாழ்த்துரைகளை வழங்க அழைக்கப்பெற்றவர்களில் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் அன்பர்களும் கலந்து கொண்டார்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்க வேண்டியதொன்றாகும்.