LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் ஒரு தமிழ் ஒலிபரப்புச் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடா இராஜ்குமார்

Share

அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீது புகழாரம்

தமிழோச சினி மீடியா கலை நிகழ்ச்சிகளுக்காகவும் தான் எழுதிய ” வானலைகளில் ஒரு வழிப்போக்கன் ” என்ற நூலை வெளியீடு செய்யவும் ரொறன்ரோ மாநகர் வந்துள்ள , உலகத் தமிழ் மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்ற அன்பு அறிவிப்பாளர் பி. எச் அப்துல் ஹமீது அவர்கள் ஆகஸ்ட் 9 ம் திகதி செவ்வாய்க்கிழமை நடா ராஜ் குமார் அவர்கதளின் EAST FM இன் புதிய கலையகத்துக்கு விஜயம் செய்து கலையகத்தைப் பார்வையிட்டதுடன் தனது ஆசியையும் , வாழ்த்துக்களையும் வழங்கினார்

அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் , தனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு நடா இராஜ்குமார் ககனடாவில் ஒரு ஒலிபரப்புச் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்றும் , அவரின் இந்த இமாலய வளர்ச்சி கண்டு தான் பெருமகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார் இந்த வியத்தகு வளர்ச்சி தனக்குப் பெருமை தருவதாவும் அவர் அங்கு கூறினார். அவரது இந்த புகழாரம் சூட்டும் வார்த்தைகளை அங்கு கூடியிருந்த அனைத்து வானொலிக் கலைஞர்களும் கரகோசம் செய்து வரவேற்றனர்.

திரபி. எச் அப்துல் ஹமீது அவர்களுடன் ஐரோப்பிய வானலையில் கோலோச்சும் அறிவிப்பாளர் திரு எஸ். கெ. ராஜன் அவர்களும் கலையகம் சென்றிருந்தார் . அவரும் தனது வாழ்த்துக்களை பெரு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்

உலகத்தமிழ் ஒலிபரப்பாளர் பி. எச் அப்துல் ஹமீது அவர்களின் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 12 ம் திகதி 8100 Steeles Ave East , MARKHAM MEADOW திறந்த வெளி அரங்கில் நடைபெறஉள்ளதுடன் இந்த வாரம் வெள்ளி , சனி , ஞாயிறு 3 தினங்களும் கலை நிகழ்ச்சிகள் , வர்த்தக சாவடிகள் என இந்த விழா கோலாகலமாக நடைபெற உள்ளது

இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை , இந்திய , ஐரோப்பிய கலைஞர்கள் இங்கு வருகை தந்திருப்பதுடன் கனடிய உள்ளூர் கலைஞர்களும் இணைந்து சிறப்பிக்க உள்ளனர் , 3 தினங்களும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது