LOADING

Type to search

இலங்கை அரசியல்

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் விதை கச்சான்கள் துணுக்காயில் வழங்கி வைக்கப்பட்டன

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பெண்கள் அபிருத்தி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுக்கமைய விதை கச்சான்கள் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்ப்டுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் EDCO நிறுவனத்தால் முன்னெடுக்கப்டிருந்தது

மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 15 கிராமங்களை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு தலா ஒரு குடும்பத்திற்கு 30000 ரூபாய் பெறுமதியான கோது உடைக்கப்பட்ட 15 கிலோ கச்சான் வீதம் வழங்கி வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் தலைவர் பிரசாந்த் ,இணைப்பாளர் கெம்சன் கண்காணிப்பு உத்தியோகத்தர் ரெக்ஸ் மற்றும் பெண்கள் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர் கமலினி மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்