LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி இடம்பெற்ற தேர் திருவிழா

Share

(மன்னார் நிருபர்)

(01-06-2023)

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை(101-06-2023) தேர்த்திருவிழா இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை இடம் பெற்று அதனை தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றது.

பின்னர் சுப வேளையில் கொடியேற்றம் இடம் பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் வியாழக்கிழமை (1) தேர் திருவிழா இடம் பெற்றது.

இத் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நாளை வெள்ளிக்கிழமை ( 2) ஆம் தீர்த்த திருவிழாவில் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.