LOADING

Type to search

இலங்கை அரசியல்

வட்டக்கச்சி வினோத்தின் “வேர்கள் வான் நோக்கின்” கவிதை நூல் வெளியீட்டு விழா

Share

வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டுவிழா இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் “வேர்கள் வான் நோக்கின்” கவிதை நூல்வெளியீட்டு விழா நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியினை வெளியிட்டுவைத்தார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மத்திய கல்லுரியின் முதல்வர் பூலோகராஜா, பிரதேசசபை முன்னால் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் விலகல் தொடர்பில் குறிப்பிட்டார்.