LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா- ஸ்காபுறோ நகரில் மூன்று மேடைகளில் பாடி மகிழ்விக்க வந்துள்ள தென்னிந்தியப் பாடகர் வி. எம்.மகாலிங்கம்

Share

இவ்வார இறுதியிலும் அதையடுத்து வரும் வார இறுதியிலும் கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெறும் மூன்று விழாக்களில் ரசிகர்களை பாடி மகிழ்விக்க உள்ள தென்னிந்தியப் பாடகர் வி. எம்.மகாலிங்கம் இன்று புதன்கிழமை பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது மேற்படி மூன்று விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கும் ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுசரணை வழங்கும் வர்த்தக நண்பர்கள் அவரை வரவேற்றார்கள்.

எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோ குயின்பெலஸ் விழா மண்டபத்தில் நடைபெறவுள்ள EETTV யின் KIDS OF TAMILS விழாவிலும் மறுநாள் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘உதயன் பத்திரிகையின்பல்சுவைக் கலை விழா’விலும் அதனைத் தொடர்ந்து 21-10-2023 அன்று கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘பைரவி நுண்கலைக் கல்லுரியின் ஆண்டு விழாவிலும் தென்னிந்தியப் பாடகர் வி. எம்.மகாலிங்கம் இனிய பாடல்களை எமக்குத் தரவுள்ளார்.

இங்கு காணப்படும் படங்களில் பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபர் தி. ஜெயச்சந்திரன் மாஸ்டர். உதயன் பத்திரிகையின் நிறுவனரும் பிரதம ஆசிரியருமான லோகன் லோகேந்திரலிங்கம் மற்றும் தொலைக்காட்சியின் அ திபர் ராஜ் ஆகியோரும் வர்த்தகப் பிரமுகர்களும் அவரை வரவேற்பதைக் காணலாம்