LOADING

Type to search

இலங்கை அரசியல்

மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசலின் 100 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் ஆரம்பம்

Share

(25/1/2024)

மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசலின் 100 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் புதன்கிழமை(24) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.

மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம். முகர்ரப் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில்,100 ஆவது வருடாந்த புஹாரி மஜ்லிஸ் உத்தியோகபூர்வ பிரகடனத்தினை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி நிகழ்த்தினார். பல முக்கியமான உலமாக்கள் கலந்து கொண்டு விசேட மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளனர்.

மஜ்லிஸிற்கான மஜ்மா தலைமை உரையினை மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம பேஷ்இமாம் அல்ஹாபிழ் ஏ.ஆர்.ஜெரீர் (பஹ்மி) நிகழ்தினார். செயலாளர் ஏ.ஏ.புழைல்,முன்னாள் தலைவர்கள்,பள்ளிவாசல் டிரஷ்டிமார்கள்,மரைக்காயர்கள் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.